சென்னை,ஜூலை 14- தோடர், படுகர் மொழிகளை மீட்டெடுக்கும் பணியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது என்று தமிழக பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். அமைச்சர் மாஃபா பாண்டிய ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- உதகையில் பழங்குடியின பண்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளோம். தோடர், படுகர் மொழிகளை மீட்டெடுக்கும் பணியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இரு மொழிகளை யும் பாதுகாக்க, ஒரு மில்லியன் டாலர் வழங்குமாறு, யுனெஸ்கோவிடம் உதவி கேட்டுள்ளோம். திராவிட மொழி கூட்டு எனப்படும் 40 மொழிகள் எழுத்து வடிவங்கள் இல்லாமல் உள்ளன. தமிழர்களின் தொன்மையான ஓலைச்சுவடி, செப்பேடு, பாறை ஓவியங்கள் பாது காக்க நட வடிக்கை எடுக்கப்படும். கீழடி அகழாய்விற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை, மத்திய அரசின் உதவியை கேட்போம் என்று தெரிவித்தார்.