இராமேஸ்வரம்,ஜூலை 28- இராமேஸ்ரம் மீனவர்கள் துரை சிங்கம் என்பவருக்கு சொந்தமான படகில், நாகராஜ், பெனடிக்ட், இன்னாசி உள்ளிட்ட 7 பேர், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி 7 மீனவர்களையும் படகுடன் சிறைப் பிடித்து, தலைமன்னார் கடற்படை முகா முக்கு கொண்டு சென்றனர். விசார ணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிறார்கள்.