தமிழக அரசுக்கு சிஐடியு வலியுறுத்தல்
திண்டுக்கல்,மார்ச் 21- கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் அத்தியாவ சியமான பணிகளைச் செய்துவரும் குடிநீர் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக்காவலர்களுக்கு நோய்த்தொற்று தடுப்பு உபகரணங்களை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சம்மேளனம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்த அமைப்பின் மாநிலப் பொதுச்செய லாளர் கே.ஆர்.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் 15 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 12,524 ஊராட்சிகள் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைக ளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக அமலாக்கி வரு கின்றது. இது வரவேற்க வேண்டியது ஆகும். மேலே கண்ட உள்ளாட்சி அமைப்புகளில் அத்தியாவசியமான தூய்மைப் பணி, குடிநீர் விநியோகம் போன்ற அடிப்படை பணிகளில் சுமார் 2 லட்சம் ஊழியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடு பட்டு வருகிறார்கள். நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கப்படுவ தைப்போல் அனைத்து உபகரணங்களும் அடிப்படை பணியாளர்களுக்கு வழங்க வேண்டியது அவசியமாகும்.
1.மாநகராட்சிகளில் பணிபுரியும் நிரந்தர தூய்மைப் பணியாளர்கள், தினக்கூலி, ஒப்பந்த தூய்மைப் பணியா ளர்கள், குடிநீர் பிரிவுஊழியர்கள் உட்பட அனைத்து அடிப்படை பணியாளர்களுக்கும் மாஸ்க், கையுறை, கிருமிநாசினி போன்றவை தினசரி வழங்கப்பட வேண்டும்.
2.நகராட்சிகளில் பணிபுரியும் நிரந்தர தூய்மை பணியாளர்கள், தினக்கூலி, ஒப்பந்த தூய்மை பணியா ளர்கள், குடிநீர் பிரிவு ஊழியர்கள் உட்பட அனைத்து அடிப்படை பணியாளர்களுக்கும் மாஸ்க், கையுறை, கிருமிநாசினி போன்றவை தினசரி வழங்கப்பட வேண்டும்.
3. பேரூராட்சிகளில் பணிபுரியும் நிரந்தர தூய்மைப் பணியா ளர்கள், தினக்கூலி, ஒப்பந்த, சுயஉதவிக்குழு தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடிநீர் பணியாளர்கள் உட்பட அடிப்படை பணியாளர்கள் அனைவருக்கும் மாஸ்க், கையுறை,கிருமிநாசினி போன்றவை தினசரி வழங்கப்பட வேண்டும்.
4. ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைக் காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் மாஸ்க், கையுறை, கிருமிநாசினி போன்றவை தினசரி வழங்கப்பட வேண்டும்.
5. உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் 2 செட் சீருடைகள் வழங்க வேண்டும்.
6. கூட்டுமாறு, சாக்கடை கரண்டிகள், குப்பை வண்டிகள், பேட்டரி வாகனங்கள் தேவையான அளவு வேலைசெய்யும் உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். சாக்கடை மற்றும் புதை சாக்கடைகளில் தொழிலாளர்கள் இறங்கி வேலை செய்யும் நிலை தடுக்கப்பட்டு மாற்று உபகரணங்கள் பயன்படுத்த வேண்டும்.
7. தூய்மைப் பணியாளர்கள் உட்பட அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும். உடல்நலம் பாதிப்பு உள்ளவர்க ளுக்கு மனிதாபிமான அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டும்.
மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள துப்புரவு தொழிலா ளர்களை தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் தூய்மைப் பணியாளர் என அழைக்க வேண்டும் என அறிவித்துள்ளார். தூய்மைப் பணியாளர் என அழைத்தால் மட்டும் போதாது. இப்பணி நவீனமாக்க போதிய நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட உள்ளாட்சி அமைப்பு பணியாளர்க ளுக்கு நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க மேலே கண்ட நடவ டிக்கைகளை எடுக்க தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.