tamilnadu

பாதுகாப்பு நடவடிக்கையை உறுதி செய்து ஆன்லைன் வகுப்புகள்: அரசு தரப்பு வாதம்

சென்னை,ஆக.28- தேவையான அனைத்துப் பாதுகாப்பு நட வடிக்கைகளும் உறுதிசெய்யப்பட்ட பிறகே  ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறை கள் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய அரசுத்  தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரி விக்கப்பட்டது. ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடை விதிக்கக்கோரிய வழக்குகள், நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜ ரான வழக்குரைஞர்கள், இணையதள சேவை  குறைபாட்டால் பெரும்பாலான நேரங்களில் உரிய நேரத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாணவர்கள் செல்லமுடியாத சூழல் நிலவு வதாகப் புகார் தெரிவித்தனர். ஏற்கனவே ஊரடங்கால் பெற்றோர்கள் வருமானம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சூழலில், ஆன்லைன் வகுப்புகளுக்கு என பெற்றோர்கள் மாதம் ஒன்றுக்கு 2,500  ரூபாய் செலவழிக்க வேண்டிய நிர்ப்பந் தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர். தொடர்ந்து மத்திய அரசு சார்பில் ஆஜ ரான கூடுதல் துணைத் தலைமை வழக்குரை ஞர் சங்கர நாராயணன், டிஜிட்டல் வழிக் கல்வியை நோக்கிப் பயணிக்க வேண்டிய காலம் வந்துவிட்டதாகவும், தேவையான அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகள் வெளி யிடப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மாணவர்களுக்கு எந்த ஒரு சுமையும் ஏற்ப டாது எனவும் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 31ஆம்  தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.