tamilnadu

img

3 மாவட்டங்களில் ‘நீட்’ இலவச பயிற்சி

சென்னை, ஆக.27- சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட  மூன்று மாவட்டங்களில் அரசு பள்ளி மாண வர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்பு கள் தொடங்கியது.  இந்த இலவச நீட் பயிற்சி மையங்களில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஆங்கில வழி யில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்க ளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. Etoos India என்ற பயிற்சி நிறுவனத்து டன், அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்க ளும் இணைந்து மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கின்றனர். ஏற்கெனவே, சென்னையில் 4 மையங்களில் சிறு பான்மை மாணவர்களுக்கு, மத்திய அர சின் சிறுபான்மை நலத்துறை மூலம் வார  இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்  கிழமைகளில் NEET & JEE தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வரு கிறது.  தமிழகம் முழுவதும் உள்ள 400க்கும்  மேற்பட்ட இலவச நீட் பயிற்சி மையங்க ளில் விரைவில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

;