tamilnadu

img

8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு

சென்னை,டிச.15- தமிழகம் முழுவதும் 8 ஆம் வகுப்பு மாணவர்க ளுக்கான தேசிய திற னாய்வுத் தேர்வு (என்எம் எம்எஸ்) நடைபெற்றது. 8 ஆம் வகுப்பு மாண வர்கள், கல்வி உதவித் தொகை பெற வழிவகுக்கும் விதமாக தேசிய வரு வாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டு 533 தேர்வு மையங்களில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 292 மாண வர்கள் தேர்வு எழுதவிருந்த நிலையில், கனமழை காரண மாக டிசம்பர் 1 ஆம் தேதி நடக்கவிருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, டிச.15 ஞாயிறன்று காலை 9.30 மணிமுதல் 11 மணி வரை மனத்திறன் தேர்வும், 11.30 முதல் 1 மணி வரை படிப்பறிவுத் தேர்வும் நடை பெற்றன. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாண வர்களுக்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண்டு தோறும் ரூபாய் 12 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.