சென்னை, ஜூன் 28- ஹெல்மெட் விதிமீறல்க ளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க, மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. கார்களில் செல்லும் அனை வரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவ ரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது சட்ட விதி. இதை அரசு முறையாக அமல்ப டுத்தவில்லை என்று கூறியும், முறைப்படி செயல்படுத்த அரசுக்கு உத்தரவிடக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப் பட்டுள்ளது.
இதை விசாரித்த உயர்நீதி மன்றம், இருசக்கர வாகன விபத்துக்களில் தலையில் அடி பட்டு இறந்தவர்கள் எத்தனை பேர், காயமடைந்து சிகிச்சை பெற் றவர்கள் எத்தனை பேர் போன்ற தகவல்களை அறிக்கையாக தாக்கல் செய்ய மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் என காவல்துறை தரப்பில் கேட்கப் பட்டது. மேலும், இருசக்கர வாக னங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதில்லை என்றும், அதற்கு எதிராகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருசக்கர வாகனங்களில் பின்னிருக்கையில் அமர்ந்து செல்பவர்களில் 100 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியவில்லை என்றால், 100 சதவீத வழக்குகள் பதிவாகாதது ஏன்? என நீதிபதி கள் கேள்வி எழுப்பினர்.
மேலும் சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் இன்று பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர்கள் இரண்டு பேர், வேலை செய்யாமல் சாலையின் ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை பிடிக்க வேண் டாம் என உயரதிகாரிகள் காவல் துறையினருக்கு ஏதேனும் அறி வுறுத்தி யுள்ளனரா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதேபோல, சேலம் மாவட்டத் தில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஹெல்மெட் அணியாத கார ணத்தினால் இரண்டு காவலர்கள் உயிரிழந்ததை சுட்டிக்காட்டி வேதனை தெரிவித்தனர். மேலும், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிவதை மாநகர காவல் ஆணையர் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தர விட்டனர். ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் பய ணிப்பவர் கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை ஜூலை 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும், ஜூலை 5 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் அறிக்கை திருப்திகரமாக இல்லை என்றால் நீதிமன்றத்தின் அடுத்த கட்ட நட வடிக்கைகள் கடுமையாக இருக்கும் என்றும் நீதிபதிகள் எச்ச ரித்தனர்.