இளம்பிள்ளை, ஜூன் 16- முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என இடங்கண சாலை பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள் ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலை யில், சேலம் மாவட்டம், இடங்கணசாலை பேரூராட்சி பகுதிக்குட்பட்ட பகுதியில் கடந்த வாரம் திருட்டு வழக்கில் கைதான இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், செவ்வாயன்று இடங் கணசாலை பேரூராட்சி செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் பொது மக்களிடம் விழிப்புணர்வு மேற்கொள்ளப் பட்டது. அப்போது, அனைவரும் வெளியில் வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து முகக்கவசம் அணி யாமல் வருவோர்களிடம் ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.