tamilnadu

img

மின்சாரம் தாக்கி இருவர் பலி

கும்பகோணம், ஆக.18- கும்பகோணம், சுவாமிமலையில் திருமண நிகழ்ச்சியையொட்டி, நண்பர்கள் சிலர் அப்பகுதியில் பிளக்ஸ் போர்டு வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த மின்சார டிரான்ஸ்ஃபார்மர் மீது பிளக்ஸ் போர்டு சாய்ந்தது. இதில், பிளக்ஸ் போர்டிலிருந்த இரும்பு கம்பியில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து, போர்டு வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஹரிஹரன், முகமது ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர். மேலும் உடன் இருந்த சிவா, விஜய் ஆகிய இருவர் லேசான காயத்துடன் மீட்கப்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருமண வீட்டார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து, சுவாமி மலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.