சென்னை, டிச.16- தேர்தல்கள் பற்றிய விழிப்புணர்வு, வலிமை யான ஜனநாயகத்தை உருவாக்கும் என்ற கருப் பொருளில் தேசிய வாக்காளர்கள் தினம் கடை பிடிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் 1950ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இந்த நாள் தேசிய வாக்காளர் தினமாக 2011ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 10ஆவது தேசிய வாக்காளர் தினம் வரும் 25ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருத்தை வலி யுறுத்தும் வகையில் தேசிய வாக்காளர் தினம் கடைப் பிடிக்கப்படும். தேர்தல்கள் பற்றிய அறிவு, வலிமை யான ஜனநாயகத்தை உருவாக்கும் என்ற கருப் பொருளில் வரும் ஆண்டில் தேசிய வாக்காளர் தினம் கடைப்பிடிக்கப்படுவதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.