அறிவியல் இயக்க வல்லுநர் குழு முதல்வருக்கு வேண்டுகோள்
சென்னை,ஜூன் 26- இன்றைய சூழ்நிலையில் இணையவழி வகுப்புகள் மாற்றோ, தீர்வோ அல்ல. மாற்று வகுப்பறைகள் குறித்து அரசு சிந்திக்க வேண்டும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அமைத்த கல்விக்கான வல்லுனர் குழு வேண்டு கோள் விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: குழந்தைகளின் உடல்நலமும் உளநலமுமே மற்ற எல்லாவற்றையும் விட முக்கியமானது. கொ ரோனாத் தொற்று குறைவதைக் கணக்கில் கொண்டு பள்ளிகளை ஜூலைக்குப் பின்னரும் கல்லூரிகளை செப்டம்பருக்குப் பின்னரும் திறக்கலாம் என்ற ஆலோசனை இருந்து வரு கிறது. தமிழக அரசைப் பொறுத்தவரையில் பள்ளித் திறப்பு குறித்து முதல்வர் உரிய நேரத்தில் அறிவிப்பார் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இடைப்பட்ட காலத்தில் குழந்தைகளுக்கான இணையவழி வகுப்புகள் அல்லது பிற முறையிலான வகுப்புகள் குறித்து எந்த வழி காட்டுதலையும் மாநில அரசு வெளியிட வில்லை. ஆனாலும் தனியார் பள்ளிகள் இணைய வழி வகுப்புகளை நடத்தி வருவதாக தகவல் கள் கிடைக்கின்றன. கற்றல் கற்பித்தலில் மாணவர், பெற்றோர், ஆசிரியர் மற்றும் சமூகநிலை ஆகியன முக்கிய மானது என உளவியல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். மக்கள் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள இச்சூழ் நிலையில் இணையவழி வகுப்புகள் நகைப்பு க்கு உரியதாகவும் வேதனை தரும் செயல்பாடாக வும் இருக்கிறது. இந்திய அளவில் தமிழகத்தில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் விகிதம் 40 முதல் 50 சதவீதம் மட்டுமே இருக்கலாம் என அறியப்படுகிறது. ஒரு வீட்டில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தா லும் அது குழந்தைகளிடம் இருப்பதில்லை. அவர்களது பெற்றோர் பயன்படுத்தும் நிலை யிலேயே உள்ளது. எனவே தமிழகத்தில் இணை யவழிக் கல்வி அனைத்துக் குழந்தைகளையும் சென்றடையும் வாய்ப்பு மிகவும் குறைவே ஆகும். நன்கு கற்றவர்களே கூட இந்தவசதிகளைப் பயன்படுத்த தடுமாறும்போது தொழில்நுட்ப வசதிகளைக் கையாளும் திறனற்ற பெரும் பான்மையான மக்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுகிறது. பொருளாதார வேறுபாடு களால் அமைந்த ஏற்றத்தாழ்வுகள் மிக்க இந்த சமூகத்தில் அனைத்துக் குழந்தைகளுக்கும் இணையவழி வகுப்புகளை நடைமுறைப் படுத்தலாம் என நினைப்பது அரசுப் பள்ளி மாண வர்களுக்கு எவ்வகையிலும் பயன் தராது.
ஆன்லைன் வகுப்புகளை திணிப்பதா?
தொழில்நுட்ப ரீதியான அனைத்தும் வகுப் பறைக் கற்றல் கற்பித்தலுக்கு உறுதுணை வளங் களாக இருக்கமுடியுமே தவிர வகுப்பறைக் கல்விக்கு மாற்றாக ஒருபோதும் அமைய முடியாது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் டிஜிட்டல் கற்றலுக்கு எதிரனது அல்ல. பள்ளி சார்ந்த கற்றலுக்கும் பாடப் புத்தகம் சார்ந்த ஆசிரியர் வழி கற்பித்தலுக்குப் பதி லாக டிஜிட்டல் லேனிங் முறையில் ஒரு பகுதியான ஆன் லைன் நேரடி வகுப்புகளை திணிப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. ஆன்லைன், ஆப்லைன் வகுப்புகளை தனி யார் பள்ளிகள் ஆரம்பித்துள்ளன. அதற்கு தடை விதிக்க முடியாது என அரசு அறிவித்துள்ளது. ஆனால் அதற்கென கட்டணம் வசூலிக்கக் கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தாலும் இ்ந்த வகுப்புகளின் நோக்கமே கட்டண வசூல் தான் என்பதில் இருவேறு கருத்து இருக்கமுடியாது. இதனால் தனியார் பள்ளிகளுக்கும் அரசு பள்ளி களுக்கும் இடையில் கற்றலில் வேறுபாடுகள் உருவாகி வருகிறது.
சத்துணவு-பாடப்புத்தகங்கள் வழங்கிடுக!
எனவே அறிவியல் இயக்கத்தின் சார்பாக கீழ்க்கண்ட பரிந்துரைகளை முன்வைக்கிறோம்.
1. உடனடியான முன்னுரிமை அடிப்படை யில் கிராம அளவில்/ நகர்ப்புற அளவில் அங்கன்வாடியை மையமாக வைத்து அனைத்து குழந்தைகளுக்கும் தனியார்,சின்னஞ்சிறு நர்சரி முதல் உயர்நிலைப்பள்ளி வரை உடனடி யாக சத்துணவு வழங்க வேண்டும்.
2. தமிழகத்தில் இயங்கும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் தமிழக அரசு இதுவரை எந்த வழிகாட்டுதலும் வழங்கவில்லை. ஆனாலும் தன்னிச்சையாக, தனியார் பள்ளிகள் மிகத் தீவிரமாக இணைய வழிக் கற்றலை முன்னெடுத்து வருகின்றன. இது தமிழக அரசுக்கும், ஒரு வகையில் இந்திய அரசியல் சாசனத்தின் மாண்புகளுக்கும் எதிரானது. எனவே தனியார் பள்ளிகளின் இணையவழி வகுப்புகள், மாணவர் சேர்க்கை மற்றும் கட்டண வசூலை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்.
3. பாடப் புத்தகங்களைக் குழந்தைகளின் கரங்களில் உடனடியாகச் சேர்ப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டும்.
4. இணைய வழி அல்லாத தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முன்னரே இளையான்குடி, திருவரங்குளம் ஒன்றியங்களில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் துளிர் அறிவொளி என்ற திட்டத்தின் மூலம் நன்கு பரிசோதனை செய்து, வெற்றிகண்ட சிட்டுக்கள் மையம் போன்ற மாற்று வகுப்பறைக்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தை பள்ளிக்கல்வித்துறை அழைத்து பேசினால் உதவ தயாராக இருக்கிறோம்.
5. தொலைக்காட்சி போன்ற வெகுமக்கள் ஊடகங்களைப் பயன்படுத்தி பேராசிரியர் நன்னன் தமிழ் கற்பிப்பதைப் போல, தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப் படுவது போல பள்ளிகள் திறக்கும் வரை கற்றல் செயல்பாடுகளுக்கு நவீன தொழில்நுட்ப வசதி களைப் பயன்படுத்தும் வகையிலான அணுகு முறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
இந்த கோரிக்கைகளை பரிசீலித்து செயல் படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவின் நகல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.