tamilnadu

img

வேலூரில் அதிமுக டெபாசிட் இழக்கும்

திருச்சிராப்பள்ளி, ஆக.1- திருச்சி மாநகர மக்கள் கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநகர மாவட்டக்குழு சார்பில் வியாழனன்று மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ராஜா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் ஆகியோர் பேசினர். இப்போராட்டத்தில் பங்கேற்று கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:-  தமிழகத்தில் ஆட்சியில் உள்ள அதிமுக அரசு கடந்த இரண்டரை வருடங்களாக உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை. இதுபற்றி கேட்டால் அக்டோபர் மாதம் நடத்துவோம் என்கின்றனர். எந்த வருட அக்டோபர் மாதம் என சொல்ல மறுக்கின்றனர். இதனால் மத்திய அரசு உள்ளாட்சிக்கு வழங்க வேண்டிய 10ஆயிரம் கோடி நிதி தமிழகத்திற்கு வராமலே போய்விட்டது. இதனால் ஏற்பட்டுள்ள இழப்பிற்கு எடப்பாடி அரசாங்கமே பொறுப்பு.  ஒருபுறம் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்து விட்டு மற்றொருபுறம் 1க்கு 4 மடங்கு சொத்துவரி ஏற்றி உள்ளனர். இதற்கு இவர்களுக்கு அதிகாரம் கிடையாது.  ஆகவே உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரியை ரத்து செய்ய வேண்டும். கிரமப்புறங்களில் குடிநீர், கழிப்பறை சாலைகள் மேம்பாடு போன்ற அடிப்படை வசதிகளை செய்ய  வேண்டும் என்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது. மத்தியில் பொறுப்பேற்றுள்ள மோடி அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்து முழுமையாக 50 நாட்கள் கூட ஆகவில்லை. முதல் நாடாளுமன்ற கூட்டத்தை நீடித்து ஒரு நாளைக்கு ஒரு மசோதா என்ற முறையில் வரிசையாக மசோதாக்களை நிறைவேற்றி வருகின்றனர்.

புதிய கல்விக் கொள்கையை நிறைவேற்றி, கல்வியை நாச மாக்க திட்டமிட்டுள்ளனர். எல்லா முனை களிலும் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கும் நிலை உள்ளது. புதிய  அணைகள் மசோதா என்ற மசோதாவை யும் நிறைவேற்றி உள்ளனர். இந்தி யாவில் உள்ள அனைத்து அணை களையும் மத்திய அரசாங்கமே தன் கையில் எடுத்துக் கொள்ளும். இதில் மாநில அரசிற்கு என்ன அதிகாரம் இருக்கிறது?  அதேபோல் ஒரே தீர்ப்பாயம். அது எந்த பிரச்சனையை தீர்க்கும்? நதிநீர் பிரச்சனைகளை மத்திய அரசு தனது கையில் எடுத்துக் கொள்வதற்கான ஏற்பாடு தான் இந்த சட்டம். நாம் நீட் தேர்வை வேண்டாம் என  கூறுகின்றோம். ஆனால் மருத்துவ ஆணைய மசோதாவை நிறைவேற்றி விட்டனர். முத்தலாக் சட்டம், தேசிய புலனாய்வு ஏஜென்சி சட்டம்,  தகவல் உரிமை சட்டம், மருத்துவ கவுன்சில் சட்டம் ஆகியவற்றை திருத்தி இருப்பது அராஜகமானது. இதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வருகின்ற 6ம் தேதி ஒரு வலுமிக்க  இயக்கத்தை தமிழகம் முழுவதும் நடத்த உள்ளது. 

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, ஏற்கனவே மோடியின் பெயரில் இருந்த எதிர்ப்பு மேலும் கூடி உள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்ட மருத்து வர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.  எனவே 2019 ஏப்ரலில் நடந்த தேர்தலில் இருந்த கோபத்தை விட தற் போது பலமடங்கு அதிகமாக இருப்ப தால் வேலூர் தேர்தலில் பாஜகவின் ஊதுகுழலான அதிமுக நிச்சய மாக படுதோல்வி அடையும். கடந்த தேர்தலில் அதிமுக, பாஜக எந்த இடத்திலும் டெபாசிட் இழக்கவில்லை. ஆனால் வேலூர் தேர்தலில் நிச்சயமாக அதிமுக டெபாசிட்டை இழக்கும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.  ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு, இடைக்கமிட்டி செயலாளர்கள் உறுப் பினர்கள், தோழமை சங்கத்தினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்டக்குழு உறுப்பினர் ரபீக் நன்றி கூறினார்.