பால் உற்பத்தி, விநியோகத்தில் பாதிப்பு
சென்னை,மே 5 - சென்னை மாதவரம் பால் பண்ணையில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாதவரம் பால் பண்ணையில் ஒப்பந்த ஊழியர் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இத னால் சக ஊழியர்களில் பெரும்பா லானோர் பணிக்கு வரவில்லை. 50 விழுக்காடு ஊழியர்களை கொண்டு உற்பத்தி நடைபெற்றது. இதன் காரண மாக சென்னையில் செவ்வாயன்று (மே 5) பால் உற்பத்தி பாதிக்கப் பட்டது. அதன் நீட்சியாக பால் கிடைக்காமல் மக்கள் திண்டாடினர். சென்னையில் தினசரி 13.5 லட்சம் லிட்டர் ஆவின் பால் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் மாதவரம் பண்ணையில் இருந்து 4.20 லட்சம் லிட்டர், அம்பத்தூரில் இருந்து 3.80 லட்சம் லிட்டர், சோழிங்க நல்லூரிலிருந்து 5.30 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது மாதவரத்தில் கொரோனா 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், 75 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
3.50 லிட்டர் மட்டுமே விநியோ கிக்கப்படுகிறது. மேலும் பால் விநி யோகத்தில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த தட்டுப்பாட்டை சமா ளிக்க சேலம், திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பால் கொண்டு வரப்பட்டு சென்னை மக்களுக்கு விநியோ கிக்கப்படுகிறது.
இந்நிலையில் விருதுநகரில் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளான அந்த 2 ஊழியர்கள் நேரடியாக பால் உற்பத்தியில் ஈடுபடவில்லை. வேறு யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று கூறியிருந்தார். இந்தச்சூழலில் அங்குள்ள ஊழி யர்கள் பலருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பரிசோதனை முடிவுகளின் படி மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம மாதவரம் பால் பண்ணையில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.