சென்னை,மார்ச் 5- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் மின் கணக்கீட்டாளர்கள் பதவிக்கான ஆன்லைன் தேர்வு ஆங்கிலத்தில் நடைபெறும் என்று அரசு அறிவித்திருப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசின் இந்த முடிவு, வேலைவாய்ப்பு அலுவலகங்க ளில் பதிவு செய்து விட்டு, பல வருடங்களாக காத்துக் கொண்டி ருக்கும் கிராமப்புற இளைஞர்களின் எதிர்காலத்தை பாழ்ப டுத்தும் திட்டமிட்ட சதியோ என்ற சந்தேகம் ஏற்படுவதாக அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். கிராமப்புற பட்டதாரிகளும், நகர்ப்புற ஏழை இளைஞர்க ளும், மின் கணக்கீட்டாளர் தேர்வில் பங்கேற்று வெற்றி பெறும் வகையில், ஆன்லைன் தேர்வினை முழுமையாகத் தமி ழில் நடத்திட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள் ளார். தவறான கேள்விகளுக்கு “நெகடிவ்” மதிப்பெண் வழங்கும் முறையைக் கைவிடுமாறும் அவர் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார்.