சென்னை, ஜூலை 3- கூட்டுறவு நிறுவனங்களில் தனிநபர் நகைக்கடன் உச்ச வரம்பு 20 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரி வித்தார். பேரவையில் புதனன்று (ஜூலை 3) நடைபெற்ற தமது துறை மானியத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: வேளாண் விளைபொருட்களை இருப்பு வைத்து லாபகர மான விலை கிடைக்கும் போது விற்று பயனடையும் நோக்கத்து டன் விவசாயிகளுக்கு தானிய ஈட்டுக்கடன் வழங்கப்படு கிறது. இந்த கடன் உச்சவரம்பு 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். சென்னை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் புதிய கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையங்கள் தொடங்கப்ப டும். சேலம் சின்னகல்வராயன் பல் நோக்குக் கூட்டுற வுச் சங்கத்தில் 75 லட்சம் ரூபாய் செலவில வணிக வளாகம் அமைக்கப்படும். 5 மத்திய கூட்டுறவு வங்கிகளின் 7 புதிய கிளைகள் துவக்கப்படும். திருநெல்வேலி மற்றும் சிவகங்கை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச்சாலையில் பெட்ரோல், டீசல் வழங்கும் நிலையங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.