tamilnadu

img

மத்திய தொழிற்சங்கங்கள் கண்டனம்

ஜேஎன்யு மாணவர்கள் மீது தாக்குதல்

புதுதில்லி, நவ. 20- விடுதிக் கட்டண உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிக் கொண்டி ருக்கிற ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் மீது  காவல்துறையினர் காட்டுமிராண்டித் தனமான முறையில் தாக்குதல் தொடுத்திருப்பதற்கு, தில்லியில்  இயங்கும் மத்திய தொழிற்சங்கங் களின் கூட்டு மேடை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மாணவர்கள்மீது மிகவும் மூர்க்கத்தனமான முறை யில் நடந்துகொண்டுள்ள காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் கோரியுள்ளது. தில்லியில் இயங்கும் ஐஎன்டி யுசி, ஏஐடியுசி, எச்எம்எஸ், சிஐடியு, ஏஐயுடியுசி, தொமுச, எஸ்இ டபிள்யுஏ, யுடியுசி, ஏஐசிசிடியு, டியுசிசி மற்றும் எம்யிஇ ஆகிய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை இது தொடர்பாக ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

மோடி அரசாங்கம், லாபம் ஈட்டும்  பொதுத்துறை நிறுவனங்களைக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்திடத் துடித்திடும் சூழ்ச்சிகள் கல்வித்துறையிலும் இப்போது பிரதிபலிக்கத் தொடங்கியிருக்கிறது. பொதுக் கல்வியைக் கைவிட்டுவிட்டு, அம்பானி- அதானி-பிர்லா  கல்வித்துறையிலும் கொள்ளை யடித்திட வசதி செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கைகளின் விளைவாக தொழிலாளர் வர்க்கத்தின் குடும்பங்களிலிருந்து உயர்கல்வி படித்திடும் மாணவர்கள் கடுமை யாகப் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஜேஎன்யு மாண வர்களின் போராட்டம் வெறும் விடுதிக் கட்டண உயர்வுக்கு எதி ரானது மட்டுமல்ல, ஆட்சியாளர்கள் நாடு முழுதும் பொதுக்கல்வியை நாசப்படுத்திட மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு எதிரானது மாகும்.   ஜேஎன்யு மாணவர்கள் நடத்தும் போராட்டம் ஏழை மாணவர்களுக்கு  உயர்கல்வியை மறுத்திடக்கூடிய விதத்தில் மத்திய மோடி அரசு எடுத்துவரும் நட வடிக்கைகளுக்கு எதிரானதாகும்.

தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஜேஎன்யு மாண வர்களுக்கு, மத்திய தொழிற் சங்கங்களின் கூட்டு மேடை தன் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும், மத்திய அரசு போராடும் மாணவர்களுடன் பல்கலைக் கழக நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்குத் தீர்வு காணக்கூடிய விதத்தில் தலையிட வேண்டும் என்றும் கோரியிருப்பதுடன் கல்வி நிறுவனங்களை தனியார்மயம், வணிகமயம் மற்றும் வகுப்புவாத மதவெறி அடிப்படையில் மாற்ற  முயலும் புதிய கல்விக் கொள்கை யை உறுதியாக எதிர்ப்பதாகவும் கூட்டுமேடை தெரிவித்துள்ளது.