மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 11- இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பை தீர்மா னிக்கும் போது, மாதாந்திர ஊதியத்தை உள்ளடக்கும் மத்திய அரசின் முடிவை கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செய லாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படை யில், மத்திய அரசு வேலை வாய்ப்பு மற் றும் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டோ ருக்கு 27 சதமான இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென அறிவித்தது. இதனை எதிர்த்து, இந்திரா சஹானி என்பவரால் தொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம், இதர பிற்படுத்தப்படோருக்கான 27 சத மான இடஒதுக்கீட்டை செயல்படுத்திட வேண்டுமென தீர்ப்பளித்தது. அதே சம யம் இந்த சலுகையினை பெறுவதற்கு வரு மான வரம்பினை (கிரிமிலேயர்) தீர்மானிக்க வேண்டுமென உத்தரவிட்டது. இதன்படி வருமான வரம்பினை தீர்மானிப்பதற்கு நீதி பதி ராம் நந்தன் பிரசாத் அவர்கள் தலை மையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அக்குழு இதர பிற்படுத்தப்பட்டோரில் இட ஒதுக்கீடு பெறுவதற்கு வருமானத்தை கணக்கிடுவதற்கான அம்சங்கள் குறித்து தெளிவான பரிந்துரைகளை வழங்கியது. முக்கியமாக, அதில் வருமான வரம்பை கணக்கிடும் போது, மாதாந்திர ஊதியத்தை யும், நில வருமானத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என குறிப்பிட்டி ருந்தது. இதனை ஏற்றுக் கொண்டு, மத்திய அரசு, அரசாணை வெளியிட்டு, கடந்த பல ஆண்டுகளாக இதுவே நடைமுறையில் இருந்து வருகிறது.
தற்போதைய மத்திய பாஜக அரசு, அவர் களின் சித்தாந்த அடிப்படையில் இட ஒதுக்கீட்டு கோட்பாட்டை படிப்படியாக சிதைப்பதற்கான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதி யாக, இதுகாறும் அமலாக்கி வந்திருக்கிற வருமான வரம்பு கோட்பாட்டை மாற்றி யமைத்திட தீர்மானித்துள்ளது. அதாவது, வருமான வரம்பை தீர்மானிப்பதில் மாதாந்திர ஊதியம் மற்றும் நிலத்து வரு மானத்தையும் சேர்த்து கணக்கிட வேண்டு மென தற்போது முடிவு செய்துள்ளது. நாடா ளுமன்ற நிலைக்குழுவும் மத்திய அரசு மேற்கொண்ட முடிவுக்கு எதிர்ப்பு தெரி வித்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிசன், தற்போது ஏற்றுக்கொள்ள முன்வந்திருப்பதற்கு மத்திய அரசின் நிர்ப்பந்தமே காரணம் என ஐயம் எழுகிறது.
இவ்வாறு மாதாந்திர ஊதியத்தையும், நில வருவாயையும் வருமான வரம்பு தீர்மா னிப்பதில் சேர்த்து கணக்கிட்டால், தற்போது இடஒதுக்கீடு பெறும் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் பலர், அத னைப் பெற முடியாத நிலைமை ஏற்படும். அரசின் மேற்கண்ட முடிவு இதர பிற்படுத் தப்பட்ட மக்களின் சமூக, பொருளாதார அடிப்படையை நீர்த்துப் போகச் செய்து விடும். இதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வஞ்சிக்கப்படும் நிலை உருவாகும்.
நாடு முழுவதும் கோவிட் 19 நோய்த் தொற்றினாலும், அதனால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கினாலும் இந்திய நாட்டு மக்கள் குறிப்பாக, அடித்தட்டு மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். விவசாயி கள், விவசாயத் தொழிலாளர்கள், வியாபாரி கள், சிறு-குறு தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்துப் பகுதி மக்களும் பெரும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டி ருக்கின்றனர். பல கோடி தொழிலாளர்கள் வேலையிழப்பு, வருமானம் இழப்பு எனத் துயருற்றிருக்கும் நிலையில், இம்மக்க ளைப் பாதுகாத்திட பல நிவாரணத் திட் டங்களை நிறைவேற்றுவது பற்றி எள்ளள வும் மோடி அரசு கவலைப்படவில்லை. மாறாக, இட ஒதுக்கீட்டு கொள்கையினை நீர்த்துப்போகச் செய்வதில் மோடி அரசு அவசரம் காட்டி வருவது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். எனவே, மத்திய அரசு இதர பிற்படுத் தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் வரு மான வரம்பில் மாதாந்திர ஊதியம் மற்றும் நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை உடனடியாக கைவிட வேண்டுமென வலி யுறுத்துகிறோம். மத்திய அரசின் இந்த முடி வினை எதிர்த்து தமிழக மக்கள் ஒன்றுபட்டு குரலெழுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.