சென்னை,மே 14- கொரோனா நோய் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள் ளது. இந்த ஊரடங்கால் கற்றல், கற்பித்த லில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அறி க்கை அளிக்க தமிழக அரசு குழு அமைத்துள்ளது. கொரோனா ஊரடங்கால் பல்வேறு தொழில்கள் முடங்கி, தொழிலாளர்கள் பாதிக் கப்பட்டுள்ளனர். இதில் கல்வித்துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு தேர்வு கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறி வித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் கற்றல், கற்பித்தலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க பள்ளிக் கல்வி ஆணையர் சிஜி தாமஸ் தலைமை யில் 12 பேர் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்தக் குழு 15 நாளில் அறிக்கை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.