tamilnadu

img

7 பேர் விடுதலை: ஆளுநரின் செயலகம் கூறுவது என்ன?

சென்னை, மார்ச் 20 - ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை தொடர்பாக, மல்டிபிள் டிஸ்பிளினரி மானிட்டரிங் அத்தா ரிட்டி (multiple disciplinary monitoring authority) அறிக்கை  அடிப்படையிலேயே முடிவெடுக்கப்படும் என ஆளுநரின் செய லகம் பதிலளித்துள்ளது என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். சட்டப்பேரவையில் வெள்ளியனறு (மார்ச் 20) சட்டம், நீதிமன்றங்  கள் மற்றும் சிறைச்சாலை துறை  மானியத்தின் மீதான விவா தத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் தனியரசு, ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் எப்போது  முடிவெடுப்பார் என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதி மன்ற நீதிபதி, அமைச்சரவை தீர்மானம் குறித்து நிலை என்ன  என்பதை அடுத்தமுறை விசாரணைக்கு வரும்போது கேட்டு  தெரியப்படுத்துமாறு வாய்மொழியாக கூறினார். அதனடிப்ப டையில் உள்துறை செயலாளர், ஆளுநரின் செயலாளருக்கு கடிதம் எழுதினார். ஆளுநரின் செயலகம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், மத்திய புலனாய்வு கழகம் (சிபிஐ), உளவுத்துறை (ஐபி)  அதிகாரிகளை உள்ளடக்கி மல்டிபிள் டிஸ்பிளினரி மானிட்டரிங் அத்தாரிட்டி (multiple disciplinary monitoring authority) அமைக்கப்பட்டுள்ளதாகவும். அதன் அறிக்கை வந்த பிறகே முடி வெடுக்கப்படும் என்றும் அரசுக்கு தெரிவித்துள்ளனர் என்றார்.