tamilnadu

img

பஞ்சாலைகளில் மட்டும் 3 கோடி பேர் வேலை இழக்க உள்ளனர்

ஒன்றுபட்டு உறுதியோடு போராட தோழமைச் சங்கத் தலைவர்கள் உறுதி

தோழர் கே.எஸ்.பாரத்தசாரதி நகர் (காஞ்சிபுரம்), செப். 20 - பொருளாதார நெருக்கடியால் மூடப்பட உள்ள பஞ்சாலைகளில் மட்டும் 3 கோடி பேர் வேலை இழக்க உள்ளனர். ஆட்சியாளர்களின் கொள்கைக்கு எதிராக ஒன்றுபட்டு உறுதியான வலுவான போராட்டத்தை முன்னெடுப்போம் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் சூளுரைத்தனர். சிஐடியு 14ஆவது மாநில மாநாட்டு வியாழனன்று (செப்.19) தொடங்கியது. இம்மாநாட்டில் வாழ்த்துரை வழங்கி தோழமைச் சங்கத் தலைவர்கள் பேசிய தன் சுருக்கம் வருமாறு:

1. மு.சண்முகம், பொதுச் செயலாளர், தொமுச

இடதுசாரிகளை அடியோடு அழித்து ஒழித்துவிட வேண்டுமென்று சனாதனவாதி கள் கங்கணம் கட்டிக் கொண் டுள்ளார்கள்.  மாநிலங்கள வையில் குறைவான எண் ணிக்கையில் இருந்தாலும் இடதுசாரிகளுடன் இணைந்து போராடுகிறோம். போராட்டங்கள் தோல்வி அடையலாம். ஆனால் தோல்விதான் வெற்றியின் படிகட்டுகள். அவ்வாறு பெறும் வெற்றி தற்போது இருக்கக் கூடிய ஆட்சியை வேறோடு சாய்க்கக் கூடியதாக இருக்கும். மக்களுக்கு விரோதமாக, தொழிலாளர்களுக்கு எதிராக ஆட்சியாளர்கள் கொண்டு வரும் சட்டங்கள் ஒரே நாளில் அடியோடு மாறும். நியாயமான விலை கிடைக்காமல் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மோடி அரசு கார் உற்பத்தியாளர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களைப் பற்றி கவலைப்படுகிறது. தமிழகத்தில் பருத்தி நன்றாக விளைகிறது. காஞ்சிபுரத்தில் பட்டு உற்பத்தியும் சிறப்பாக இருக்கிறது. ஆனால் நெசவாளிக்கு நல்ல ஊதியம் கிடைப்பதில்லை. உலகமயக் கொள்கையால் அமைப்புசார்ந்த தொழில்கள், அமைப்புசாரா தொழில்களாக மாற்றப்பட்டு வருகிறது. இதனால் தொழிலாளர்களை இணைப்பதிலே கூட பெரிய சிரமம் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களின் தியாகத்தால் கொண்டு வரப்பட்ட சட்டங்களை திருத்துவதற்கு முன் தொழிற்சங்க தலைவர்களை அழைத்து பேச வேண்டும். ஆனால் மத்திய அரசு தன்னிச்சை யாக செயல்படுகிறது. எதேச்சதிகாரமாக செயல்பட்ட அரசுகளெல்லாம் தொழிலாளர் களின் வீரியமிக்க போராட்டத்தால் தூக்கி எறியப்பட்டுள்ளன. தொழிலாளர்களை அணி திரட்டுவோம், ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுப்போம்.

2. டி.எம்.மூர்த்தி, பொதுச் செயலாளர், ஏஐடியுசி  

உலகத்தில் எங்கும் இல்லாத வகையில் 28 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. அந்த அளவை குறைத்துக் கொண் டிருப்பதாக சொல்கின்றனர். மருத்துவர்கள் ஊசி போட்ட பின் ஏதாவது பின் விளைவு கள் ஏற்படுகிறதா என்று பார்ப்பார்கள். இல்லையென்றால் மருந்தின் அளவை கூட்டுவார்கள். ஆனால் எடுத்த எடுப்பிலேயே கூடுதலாக மருந்தை செலுத்தி விட்டு, அவன் நிலைமை மோசமானவுடன், மருந்தின் அளவை குறைப்பது எவ்வளவு முட்டாள் தனமான செயலோ, அதுபோன்றுதான் மத்திய அரசு செயல்படுகிறது. 60 கோடி பேர் பாதிக்கப்பட்ட பிறகு ஜிஎஸ்டியை குறைக்கப் போகிறேன் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்கிறார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் இருந்து மக்கள் இன்னும் மீள முடியவில்லை. நாட்டின் பொருளாதாரம்  வீழ்ச்சி அடையவில்லை என்று பிரதமர் கூறுகிறார். ஆனால் பிரதமரின் பொருளாதார ஆலோசகர், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன என்கிறார். உள்நாட்டுச் சந்தையை ஆட்சியாளர்கள் கபளீகரம் செய்கின் றனர். மக்கள் மீது நிகழ்த்தப்படும் கூர்மையான பொருளாதார தாக்குதலை எதிர்கொள்ள தனித்தனியாக அல்லாமல் அனைத்து சங்கங்க ளையும் ஒருங்கிணைந்து போராடுவோம். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே தலைவர், ஒரே கொடி என்ற சர்வாதிகார போக்கை நோக்கி ஆட்சியாளர்கள் சென்று கொண்டிருக்கின்றனர். அழகாக பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள்.  ஜனநாயக சக்திகள் ஒடுக்கப்பட்டு, பாசிசம் தலைவிரித்து நிற்கிறது. இதற்கெதிராக கோடிக்கை கொண்ட தொழிலாளி வர்க்கத்தை, வர்க்க ரீதியாக, அரசியல் ரீதியாக ஒன்றிணைந்து திரட்டுவோம்.

3.  ஏ.எஸ்.குமார், ஏஐசிசிடியு

அரசியல் அமைப்புச் சட்டத்தின் மையக் கருவை அழித்துவிடத் துடிக்கும் புதிய வடிவமாக பாசிசம் எழுந்துள் ளது. இதற்காக வெறுப்பு, பிளவு வாத, திசைதிருப்பும், அழிவு வாத அரசியல் கருத்துகளை முன் நிறுத்துகிறது. இந்தியா பொருளாதார அவசரநிலையை (எமர்ஜென்சி) எதிர்கொண்டுள்ளது. 10 லட்சம் சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. 50 லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். பிஸ்கட் ஆலை முதல் இரும்பாலை வரை தள்ளாடு கின்றன; அனைத்திலும் ஆட்குறைப்பு நடைபெறு கிறது. கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த உருப்படியான ஒரு நடவடிக்கை யும் எடுக்கவில்லை. ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு என்று ரேசன் முறையையே அழிக்க முயற்சிக்கின்றனர். ஜனநாயக உரிமைக்காகப் போராடுகிற வர்களை தேச விரோதி என முத்திரை குத்து கின்றனர். பாதுகாப்புத் துறையையே தனியார் மயமாக்குவதோடு, பி.எஸ்.என்.எல். நிறுவ னத்தை அழிவின் விளிம்பிற்கே கொண்டுவந்து விட்டார்கள். ரயில்வேயை கூறுகூறாக வெட்டி ரயில்வே நிலையம் முதல், ரயில் பாதைகள் வரை தனியாருக்கு கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பெருமுதலாளித்துவ வளர்ச்சிப்பாதை வலதுசாரி திருப்பத்தை உறுதி செய்கிறது. மக்கள்திரள் போராட்டங்கள், இடதுசாரி திருப்பத்தை கட்டாயம் உறுதி செய்யும். இந்நாட்டின் விருப்பம் இடதுசாரி திருப்பம் மட்டுமே. அந்த அடிப்படையில் அனைத்து தொழிலாளர்களையும் திரட்டி வலுவான போராட்டத்தை முன்னெடுப்போம். இடதுசாரி திருப்பத்தை ஏற்படுத்துவோம்.

4. அனவரதன், ஏஐயுடியுசி

பிறருக்கு உதவாத பணம் ஊருக்குள் முளைத்திருக்கும் நச்சு மரம் போன்றது என்றார் வள்ளுவர். ரிசர்வ் வங்கி, பொதுத் துறை நிறுவனங்களின் பணத்தை; நிலத்தை நஞ்சாக மாற்றக் கூடிய நடவடிக்கை யில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. பயிர்களை அழிக்கும் மதம் பிடித்த யானை போல் அரசு இருக்கக் கூடாது என்று பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். ஆனால் அதற்கு மாறாக பொதுத்துறைகளை சூறையாடுகிறார். இந்தியாவில் உள்ள மகேந்திரா நிறுவனம் அமெரிக்காவில் உள்ள தனது ஒரு பில்லியன் டாலர் முதலீட்டை இரண்டு பில்லியனாக அதிகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால், இந்தியாவில் முதலீடு செய்ய வெளி நாட்டு முதலாளிகளை ஆட்சியாளர்கள் அழைக்கிறார்கள். ஆட்சியாளர்களுக்கு தேசப்பற்று இருக்குமேயானால், வெளிநாட்டில் முதலீடு செய்யும் இந்திய முதலாளிகளை அழைத்து, உள்நாட்டில் முதலீடு செய்து வேலை வாய்ப்பை பெருக்க வேண்டும். உலகமயக் கொள்கை தோல்வியடைந்து விட்டது. அதன் விளைவு இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலும் பொருளாதாரம் சரிந்து கொண்டிருக்கின்றது. மத்திய மாநில அரசு பணிகளில் காலி யாக உள்ள 20 லட்சம் இடங்களை நிரப்ப மறுக்கின்றனர். பன்னாட்டு நிறுவனங்களின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கு ஆத ரவாகவே ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர். இந்த தொழிலாளர் விரோத ஆட்சிகளை தூக்கியெறிய தொழிலாளர் வர்க்கத்தால்தான் முடியும். ஒன்றுபட்டு தொழிலாளர்களை திரட்டி ஆட்சியாளர்களை விரட்டியடிப்போம்.

5. சுப்பிரமணி, எச்.எம்.எஸ்

மக்களை நேரடியாக தாக்கும் வகையில் பொரு ளாதாரம் வீழ்ந்துவிட்டது. பொருளாதார வளர்ச்சி 5 விழுக்காடாக குறைந்ததன் விளைவாக தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். பஞ்சாலைகளை மூட உள்ளதன் மூலம் 3 கோடி பேர் வேலை இழக்கப் போகிறார்கள் என்று வட இந்திய ஜவுளி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மோட்டார் வாகனத் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடிப்படை காரணம் மக்களிடம் வாங்கும் சக்தி இல்லை. வேலை வாய்ப்பும் குறைந்துள்ளது. இந்த நிலையில் எவ்வளவு முதலீடுகள் வந்தாலும், பெரிய பெரிய தொழிற்சாலைகள் வந்தாலும் அவை நிலைத்து நிற்க முடியாது. புதிய பொருளாதாரக் கொள்கையால் ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி வேலைவாய்ப்பைப் பெருக்க விட்டால் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க முடியாது என்றார். அந்த பொருளாதாரக் கொள்கை யை அறிமுகப்படுத்தியவர்களே சொன்ன பிறகும் கூட, இந்தியா விடாப்பிடியாக அந்தக் கொள்கை யை அமல்படுத்தி வருகின்றது. பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் மூடும் நிலைக்கு வந்து விட்டன. ரயில்வே, தபால், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிய மிக்கின்றனர். முதலாளிகளின் லாபத்திற்காக 200 கோடி ரூபாய் செலவிடும் இடத்திற்கு 600 கோடி ரூபாய்க்கு டெண்டர் கோருகின்றனர். நாட்டின் பொருளாதாரத்தில் 42 விழுக்காடு பங்களிக்கும் கிராமப்புற பொருளாதாரம் முற்றிலும் படுத்துவிட்டது. இந்தச் சூழ்நிலையை மாற்ற வேண்டிய பொறுப்பு பெரும்பொறுப்பு நம்மிடம் உள்ளது. தொழிலாளி என்ற ஒரு வார்த்தையை வைத்து தொழிலாளர் நலனையும் தேசத்தின் நலனையும் காக்க ஒன்றுபட்டுப் போராடுவோம்.