கோவில்பட்டி, ஜூன் 12- இராமநாதபுரம் தொல்லி யல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தின் நிறு வனர் மணிகண்டன், தலை வர் ராஜேந்திரன், கொல்லங் குடி காளிராஜா ஆகி யோர் அடங்கிய குழுவினர் தூத்துக்குடி மாவட்டத் தில் பல்வேறு பகுதி களில் களஆய்வு மேற்கொண்ட னர். கோவில்பட்டி அருகே உள்ள முடுக்குமீண்டான் பட்டி குளத்தின் மடையில் ஒரு கல்வெட்டு இருந்ததை ஆய்வுக் குழுவினர் கண்டு பிடித்தனர். இந்த கல்வெட்டு சுமார் 200 ஆண்டுகள் பழமையானது என்பது தெரியவந்து உள்ளது. இதுகுறித்து தொல்லி யல் ஆய்வாளர்கள் ராஜ குரு, மணிகண்டன் ஆகி யோர் கூறியதாவது: குளம், கண்மாய்களில் உள்ள நீரை நிலங்களுக்கு திறந்து விடுவதற்காக அமைக்கப் படும் அமைப்பு மடை ஆகும். இது உறுதியான கருங் கல்லினால் அமைக்கப்படும் போது நீண்ட நாட்களுக்கு செயல்பாட்டில் இருக்கும். மழைக்காலங்களில் நீர் நிலைகளில் உள்ள நீரை தேவையின்றி வெளியேறாத வகையில் மூடுவதற்கும் இந்த மடைகள் உதவுகின் றன. முழுவதும் கல்லினால் அமைக்கப்படும் மடை களை கல்மடை என்று அழைப் பார்கள். அதன்படி முடுக்கு மீண்டான்பட்டி கிராமத்தில் உள்ள குளத்தின் கரைக்கு அருகில் உள்ள ஒரு மடை யில் 10 அடி உயரம் உள்ள 2 தூண்கள் உள்ளன. இதில் கிழக்கு பகுதியில் உள்ள தூணின் ஒரு பக்கத்தில் 4½ அடி உயரத்துக்கு மொத்தம் 25 வரிகளில் கல்வெட்டு உள்ளது.
இந்த கல்வெட்டு, எட்டையபுரம் சமஸ்தானத் தைச் சேர்ந்த மன்னர் ராஜ ராஜ ராஜ மானியர் ஜெகவீர ராம எட்டப்பராசர், முடுக்கு மீண்டான்பட்டியில் உள்ள தன் மாப்பிள்ளை சொக்கை யாவுக்கு இந்த ஊரை தான மாகக் கொடுத்து இந்த ஊர் குளத்தில் ஒரு கல் மடையை யும் செய்து வைத்த செய்தி யை கல்வெட்டு தெரிவிக் கிறது. கல்வெட்டு முழு வதும் தமிழில் இருந்தாலும் சோமவாரமு, உத்திர நட்சேத்திரமு ஆகிய தெலுங்குச் சொற்களும் உள்ளன. மேலும் மன்னரை அய்யர் எனக் குறிப்பிட்டு உள்ளனர். எட்டயபுரம் மன்னர்களை அவர்களது பெயருடன் அய்யன் என சேர்த்து அழைக்கும் வழக்கம் இருந்து உள்ளது. ஆனால் இந்த கல்வெட்டில் அய்யர் என பன்மை விகுதியில் மன்னர் குறிப்பிடப்பட்டு உள்ளார். இதில் மன்னரின் பொதுவான பெயரை மட் டுமே குறிப்பிட்டு உள்ளனர். இதனால் மன்னர் பற்றிய தகவல்களை அறிய முடிய வில்லை. மன்னரின் மாப்பிள்ளை இந்த ஊரைச் சேர்ந்தவராக இருக்கலாம். இந்த கல் மடை உத்திர நட்சத்திரத்தில் சுபதினத்தில் நடப்பட்டு உள்ளது.
இந்த கல்வெட்டு 5021 என ஆண்டில் தொடங்கும் பெருமாள் துணை என்று முடிகிறது. இதில் 5021 விய ஆண்டு ஆனி மாதம் 28–ம் நாள் திங்கட்கிழமை என வரும் ஆண்டு, கலி யுகம், சக ஆண்டு எதிலும் பொருந்தவில்லை. எனவே இதில் உள்ள விய எனும் தமிழ் ஆண்டு, மாதம், கிழமை மற்றும் எழுத்தமைப்பு கொண்டு, இந்த கல்வெட் டின் காலம் கி.பி.1826 எனக் கணிக்க முடிகிறது. இந்த கல்வெட்டு உருவான காலத்தில் தமிழ்நாட்டில் ஆங்கில கிழக்கிந்தியக் கம் பெனியின் ஆட்சி நடந்து வந்தது. ஆனால் ஆங்கிலேய ரின் ஆண்டு உள்ளிட்ட வழக் கத்தை இந்த கல்வெட்டில் காண முடியவில்லை. இதில் தமிழ் எண்களையும், தமிழ் ஆண்டையும் பயன்படுத்தி உள்ளனர். சுமார் 200 ஆண்டு களுக்கு முன் அமைத்த கல்மடை மூலம் எட்டயபுரம் சமஸ்தானத்தின் எல்லை முடுக்குமீண்டான்பட்டி வரை பரவி இருந்ததை அறிய முடிகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.