தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் தோழர் ம.சிங்காரவேலரின் 161வது பிறந்த நாளையொட்டி செவ்வாயன்று (பிப்18) சென்னை மாவட்டஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மத்திய சென்னை மாவட்டச்செயலாளர் ஜி.செல்வா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இரா.முரளி, சி.திருவேட்டை, ஏ.ஜி.காசிநாதன், எம்.வி.கிருஷ்ணன், புலவர் வீரமணி, வீரஅருண், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.