இந்தோனேசியாவில் இன்று மீண்டும் மிதான நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
பூமியின் ‘நெருப்புக் கோளம்’ என்றழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியாவில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. அதன் அடிப்படையில் பாலி பிராந்திய பகுதியில் 00.18 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் காரணமாக அப்பகுதியில் கட்டிடங்கள், அதிர்ந்தன. நிலநடுக்கத்தால் பீதி அடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. சேதம் குறித்த விவரங்களும் இதுவரை வெளியாகவில்லை.
கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி இந்தோனேசியாவின் ஜாவா, சுமத்ரா தீவுகளில் எரிமலை வெடித்ததை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் 430 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.