tamilnadu

img

ஆஸ்திரேலியா: பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இந்தியா யோகா குரு கைது

 ஆஸ்திரேலியாவில் யோகா கற்று கொடுக்க சென்ற இடத்தில் இரண்டு பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இந்தியாவை சேர்ந்த யோகா குரு ஆனந்த் கிரி கைது செய்யப்பட்டார்.

உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத்தை சேர்ந்தவர் யோகா குரு ஆனந்த் கிரி. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் யோகா கற்று தருவதை கடந்த சில ஆண்டுகளாக இவர் செய்து வந்தார். இந்நிலையில், யோகா கற்று கொடுப்பதற்காக 6 வார விசாவில் இவர் ஆஸ்திரேலியா சென்றார். அங்கு சிட்னியில் உள்ள ஆக்லே பார்க் பகுதியில் யோகா வகுப்பு எடுக்க சென்றபோது அவர் கைது செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.  

இது குறித்து நியூ சவுத் வேல்ஸ் காவல் அதிகாரி கூறுகையில், ``கடந்த 2016ம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று ரூடி ஹில்ஸ் பகுதியில் வழிபாட்டிற்காக சென்ற இடத்திலும், 2018ம் ஆண்டு அதே ரூடி ஹில்ஸ் பகுதியில் உள்ள மற்றொரு வீட்டிற்கு சென்ற போதும் இரண்டு வீட்டிலும் இருந்த பெண்களிடம் அநாகரீகமாக தவறாக நடந்து கொண்டார். இது பற்றி மவுண்ட் ட்ரூயிட் பகுதி காவல் அதிகாரிக்கு புகார் தெரிவிக்கப்பட்டதும் அவர் விசாரணை மேற்கொண்டார். அதன் அடிப்படையில் ஆனந்த் கிரி கைது செய்யப்பட்டுள்ளார்,’’ என்றார்.இதையடுத்து, ஆனந்த் கிரி கடந்த திங்கட்கிழமை இந்தியா திரும்ப வேண்டியிருந்ததால், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார் 

இந்த தகவலை அவரது குருவும், பதே அனுமன் கோவிலின் மடாதிபதியுமான நரேந்திர கிரி உறுதி செய்துள்ளார்.



;