tamilnadu

img

தெலுங்கானாவில் வட்டாட்சியர் எரித்துக்கொலை

தெலுங்கானாவில் வட்டாட்சியர் எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அப்துல்லாபூர் தாசில்தார் விஜயா ரெட்டி. அவர் இன்று வழக்கம் போல் அவரது அலுவலகத்தில் பணியில் இருந்தார். அவரது அறைக்குச் சென்ற இளைஞர் அவருடன் பேசிக்கொண்டிருந்தார். அந்த இளைஞருக்கு கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நிலம் குறித்த பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென தாசில்தார் மீது அந்த இளைஞர்  பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இச்சம்பவம் தாசில் தார் அலுவலக வாயிலிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  இந்நிலையில் வட்டாட்சியர் மீது நெருப்பு வைத்த இளைஞர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

;