tamilnadu

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு : 12 பேர் உயிரிழப்பு

அமெரிக்க மாநிலமான விர்ஜீனியாவில் அரசு கட்டடம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர்; 6 பேர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்களில் ஒருவர் காவல்துறையை சேர்ந்தவர்.  துப்பாக்கிதாரி என்று சந்தேகிக்கப்படும் நபர், விர்ஜீனியா கடற்கரை நகரத்தின் நீண்ட நாள் மற்றும் தற்போதைய ஊழியர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கண்மூடித்தனமாக சுட்டஅந்த நபரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் அவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.விர்ஜீனியா கடற்கரை நகரத்தின் நகராட்சி மையக் கட்டடத்தில், உள்ளூர் நேரப்படி மாலை நான்கு மணிக்கு அந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட 12 பேரின் அடையாளங்கள் அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை.காவல்துறையை சேர்ந்த ஒருவர் உட்பட இந்த சம்பவத்தில் குறைந்தது ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து அதிபர் டிரம்புக்கு தெரியப்படுத்தப்பட்டதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.சம்பவ இடத்தில் எப்பிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.இது அமெரிக்காவில் 2019 ஆண்டுவரை நடைபெற்ற 150ஆவது துப்பாக்கிச் சூடு சம்பவம் ஆகும்.

;