tamilnadu

img

காஷ்மீர் குறித்து 54 ஆண்டுகளுக்கு பின் ஐநா சபையில் இன்று ஆலோசனை 

ஸ்ரீநகர், 
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 54 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஐ.நா சபையில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. 
காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மோடி அரசு  கடந்த 5ம் தேதி ரத்து செய்து அறிவித்தது.  மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. ஆனால் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த விவகாரத்தில் சீனாவின் உதவியை பாகிஸ்தான் நாடி உள்ளது. 
இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தை அவசரமாக விவாதிக்க வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு சபையிடம் பாகிஸ்தான் கடிதம் கொடுத்தது. அத்துடன் பாதுகாப்பு சபையின் உறுப்பு நாடான சீனாவும், இந்த விவாதத்தில் பங்கு பெற வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளது. பாகிஸ்தானின் கோரிக்கையை ஐ.நாவின் பாதுகாப்பு சபை தலைவரான நிதி ஜோன்னா ரொனேக்கா ஏற்றுக் கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து காஷ்மீர் விவகாரம் தொடர்பாக உறுப்பு நாடுகள் இன்று ஆலோசனை நடத்துகின்றன. ரகசியமாக நடத்தப்படும் இந்த ஆலோசனையில் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா பிரித்தானியா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. 
கடந்த 1965ம் ஆண்டு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு சபையில் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து 54 ஆண்டுகளுக்கு பின் தற்போது காஷ்மீர் விவகாரம் குறித்து ஐநா சபை விவாதிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

;