tamilnadu

img

கொரோனா தடுப்பு மருந்து கண்டறியப்படும் வரை பள்ளி கிடையாது

கொரோனா பெருந்தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டறியப்படும் வரை பள்ளிகள் திறக்க முடியாது என பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது. 
பிலிப்பைன்சில் கொரோனா தொற்றால் 22,474 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,011 பேர் பலியாகி உள்ளனர். கடந்த திங்கட்கிழமை மட்டும் 579 புதிய கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டது. இந்நிலையில் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்கப்படுத்த பிலிப்பைன்ஸ் அரசு ஜூன் 1-ம் தேதி முதல் பல புதிய தளர்வுகளை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை பள்ளிகள் திறக்கப்படாது என பிலிப்பைன்ஸ் கல்வித்துறை அறிவித்து உள்ளது. 
பிலிப்பைன்ஸ் கல்வித்துறை செயலர் லியோனர் பிரியோனஸ் கூறியதாவது:-
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை பள்ளிகள் திறக்கப்படாது. தனிமனித இடைவெளியுடன் குழந்தைகளைப் பள்ளியில் உட்கார வைக்க உடன்பாடு இல்லை, குழந்தைகள் தங்கள் நண்பர்களை நெருங்கும் போது தொற்று நிச்சயம் பரவும். ஆகஸ்ட் இறுதி வாரம் முதல் ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி மூலமாக கற்பித்தல் வகுப்புகள் தொடங்கும். எனினும் வறுமையான மற்றும் இணைய இணைப்பு இல்லாத சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி குறித்துக் கவலை எழுகிறது. இவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து யோசித்து வருகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

;