tamilnadu

img

பாகிஸ்தான் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலி

பாகிஸ்தானில் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் லாகூர் மாகாணத்தில் ஷாதா பகுதியில் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது கேஸ் சிலிண்டர் வெடித்தது. இதனால் வாசனை திரவியங்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் பற்றியெறிந்த தீ தொழிற்சாலை முழுவதும் மளமளவென பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சிக்கிய 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தீ விபத்தில் சிக்கிய 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

;