tamilnadu

img

மெக்சிகோவில் நடந்த தீ விபத்தில் சிக்கி 23 பேர் பலி

மெக்சிகோ நாட்டில் பாரில் ஏற்பட்ட  தீ விபத்தில் சிக்கி 23 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மெக்சிகோ நாட்டின் வெராகுரூஸ் மாநிலத்தில் கோட்சாகோல்காஸ் துறைமுக நகரில் எல் காபலோ பிளான்கோ என்ற பார் செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 8 பெண்கள், 15 ஆண்கள் என மொத்தம் 23 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியானார்கள். மேலும், 13 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
தீவிபத்து நடைபெற்ற எல் கபாலோ பிலாங்கோ என்ற பாரில் கிடைத்த சாட்சிகளின் அடிப்படையில், பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் துவங்கப்பட்டிருப்பதாக காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.   
 

;