tamilnadu

பாஜக ஆளும் உ.பி.மாநிலத்தில் பத்திரிகையாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை

லக்னோ, ஆக.18- பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநி லத்தில், பட்டப்பகலில் பத்திரிகையாளர் மற்றும் அவரது சகோதரர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  சகரன்பூர் மாவட்டம் கோட்வாலி பகுதியில் வசித்த பத்திரிக்கையாளர் ஆஷிஷ் அஸ்வனி மற்றும் அவரது சகோதரரை ஞாயி றன்று காலை நபர் ஒருவர் சந்திக்க வந்துள் ளார். அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரமடைந்த அந்த நபர், ஆஷிஷ் அஸ்வனி மற்றும் அவரது சகோ தரனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கி ருந்து தப்பிச்சென்றுள்ளார். சத்தம் கேட்டு அங்கு திரண்ட மக்கள், இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆனால் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த னர்.  இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், அசம்பாவிதம் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக காவல்துறையினரை அப்பகுதியில் குவித்துள்ளனர்.

;