tamilnadu

img

கொரோனா வைரஸ் பாதிப்பு : 91 வயது முதியவர் குணமடைந்தார் 

பெய்ஜிங் 
புத்தாண்டோடு புதிய அவதாரம் எடுத்துள்ள கொரோனா வைரஸ் சீனாவை நிலைகுலைய செய்து வருகிறது. ஒரு நாளுக்கு 43 பேர் விதம் இதுவரை 660-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 

சீனாவில் மட்டுமல்லாமல் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்பட 20-க்கும் அதிகமான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது. மேலும் 30000-க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸா பாதிக்கப்பட்டு சிறப்பு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 4500-க்கும் அதிகமானோர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளிப்பது சவாலாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  

இந்நிலையில், சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 91 வயது நிரம்பிய வாங் என்ற நபர் கடந்த மாதம் 23-ஆம் தேதி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உரிய சிகிச்சை மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்ததையடுத்து வாங் வெள்ளியன்று வீடு திரும்பியதாக மருத்துவமனை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவில் வயது நிரம்பியவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகிவரும் நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 91 வயது முதியவர் விடுபட்டது மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது.  

;