tamilnadu

img

பிரேசில் சிறை கைதியகளிடையே மோதல்: 57 பேர் பலி

பிரேசில் சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் 57 பேர் உயிரிழந்தசம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரேசில் நாட்டில் பாரா மாநிலத்தின் அல்டமிரா நகரில் உள்ள சிறையில் நேற்று கைதிகளிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 16 பேர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
இச்சம்பவம் குறித்து அல்தமிரா சிறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது
அல்தாமிரா சிறையில் கைதிகள் இரு குழுக்களாக இயங்கி வருகின்றனர். ரியோ டி ஜெனிரோவைச் சேர்ந்த கமாண்டோ வெர்மெலோ ஒரு பிரிவினரும் உள்ளூர் கிரிமினல் குழுவான கமாண்டோ கிளாஸ் ஏ பிரிவினரும் இருக்கின்றனர். இவர்களிடையே நேற்று காலை 7 மணியளவில் கைதிகளின் இரு குழுக்களும் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் 57 பேர் உயிரிழந்தனர்.
கடந்த மே மாதம் அமேசான் நகரிலுள்ள சிறையில் நடைபெற்ற கலவரத்தில் 60 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

;