tamilnadu

img

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 3 பேர் பலி

பிலிப்பைன்சில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

பிலிப்பைன்சின் கிழக்குப் பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தாவோ நகரிலிருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளியாக அமைந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதாகவும், நிலநடுக்கம் காரணமாக பல இடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும், மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை, பிலிப்பைன்சில் ஐந்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

;