tamilnadu

img

தமிழகத்தில் 9 தொழிற்சாலைகள் திறக்க அனுமதி

சென்னை, ஏப். 23- தமிழகத்தில் 9 தொழிற்சாலைகள் திறக்க அனுமதி அளித்து அரசு ஆணை வெளியிட் டுள்ளது. தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலை களை படிப்படியாக தொடங்கலாம் என்பது குறித்து தொழிலதிபர்களுடன் முதலமைச் சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக்காட்சி மூலம் முதலமைச்சர் நடத்திய இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய தொழிலதிபர்கள் பங்கேற்றனர். அப்போது மத்திய அரசு புதிதாக சில தொழில்களை தொடங்க அனுமதித்திருப் பது குறித்து முதலமைச்சர் தொழிலதிபர்களி டம் எடுத்துரைத்தார். மேலும் எந்தெந்த தொழிற்சாலைகளை படிப்படியாக தமிழ கத்தில் செயல்பட அனுமதிக்கலாம் என்பது தொடர்பாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

இதனிடையே தமிழகத்தில் தொடர்ந்து எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது  அதன்படி மிகப்பெரிய இரும்பு ஆலை கள், சிமெண்ட் தொழிற்சாலை, நீண்ட உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் ரசாயன தொழிற்சாலைகள், பெயிண்ட் தொழிற் சாலைகள், சுகர் மில், உரத்தொழிற்சாலை, மிதவை கண்ணாடிகள் உற்பத்தித் தொழிற் சாலை, டயர் தொழிற்சாலை, பேப்பர் மில் போன்ற தொழிற்சாலைகள் தமிழகத்தில் தொடர்ந்து இயங்கலாம் என்று அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

மே 3-க்கு பிறகு அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதி 

ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் மே 3 ஆம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளி யிட்டுள்ளது. 

100 நாள் வேலை திட்டத்துக்கும் அனு மதி அளிக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் தனி மனித இடைவெளியுடன் பணியாற்ற அனு மதிக்கப்பட்டுள்ளது. 

நீர்ப்பாசனம், அணைகள், சாலைகள், செங்கல் சூளை, குடிநீர் விநியோகம், தூய் மைப் பணிகள், மின்சார பணிகள் ஆகிய வற்றை மேற்கொள்ள அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. தமிழக அரசின் அனுமதி கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு பொருந்தாது எனவும் அரசாணையில் தெரி விக்கப்பட்டுள்ளது.