tamilnadu

img

தடை செய்தும் விற்பனையாகும் பிளாஸ்டிக்: அரசுக்கு நீதிமன்றம் கேள்வி?

சென்னை,பிப்.29- தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை கண்டறிய எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, பிளாஸ்டிக் தடை உத்தரவு காகித அளவிலேயே இருப்பதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.  மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் எளிதில் கிடைப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தடை உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தினர். பின்னர், சட்டவிரோதமாக பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை கண்டறிய இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கையை தாக்கல் உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 13 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.