ஆஸ்திரேலியாவில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து 160 பயணிகளுடன் மெல்போர்ன் நோக்கி பயணிகள் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் வாலன் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தடம் புரண்டது. இந்த விபத்தில் 5 பெட்டிகள் தடம்புரண்டதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்