tamilnadu

img

கரடி இனப் பிராணியை கொடூரமாக கொன்ற காவலர்

கரடி இனத்தை சேர்ந்த வோம்பட் எனப்படும் பிராணியை கொடூரமான முறையில் காவலர் ஒருவர் கொன்ற சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

தெற்கு ஆஸ்திரேலியாவின் ஐரே பெனிசுலா பகுதியில் காவல்துறை அதிகாரியாக வேலான் ஜான்காக் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கரடி இனத்தை சேர்ந்த ”வோம்பட்” என்ற பிராணியை காரில் இருந்து விரட்டி செல்கிறார். அதனை தொடர்ந்து பிராணியை கல்லால் அடித்தும், காலால் உதைத்தும் கொடூரமான முறையில் தாக்கி கொன்று விடுகிறார். இச்செயலை செய்தவுடன் தனது நண்பருடன் சேர்ந்து கூச்சலிட்டு சிரித்துள்ளார். இந்த வீடியோவை கண்ட பலர், தனது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இதை கண்டித்து விலங்குகள் நலவாரிய சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

;