tamilnadu

img

ஆப்கானிஸ்தான்: வாக்குச்சாவடியில் குண்டு வெடிப்பு

ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் நடத்தப்பட்டுள்ள குண்டு வெடிப்பு தாக்குதல் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் தற்போதைய ஜனாதிபதி அஷ்ரப் கானி ,  ஆப்கானிஸ்தான் தேசிய கூட்டணியைச் சேர்ந்த தலைமை நிர்வாகியான அப்துல்லா உள்ளிட்ட 18 வேட்பாளர்கள் உள்ளனர்.  தேர்தல் பிரச்சாரங்களில் வன்முறைகள் நடைபெற்றதால், வாக்குப்பதிவு நடைபெறும் நாளான இன்று நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
இந்நிலையில் பொதுமக்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர். வாக்குச்சாவடிகளில் தாக்குதல் நடத்துவோம் என தலீபான்கள் மிரட்டல் விடுத்து இருந்ததால், வாக்குச்சாவடிகளிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் , தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 15 பேர் காயம் அடைந்துள்ளனர்.