tamilnadu

சென்னை வந்த துபாய் மாணவர் மாயம்

ஆலந்தூர், மே 7- கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் ரகுராம். இவர் துபாயில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் இளம்பரிதி (18). இவர் துபாயில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விமானம் மூலம் சென்னை வந்தார்.மீனம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய உறவினரான சரோஜா என்பவர் வீட்டில் தங்கி இருந்தார். திங்களன்று துபாயில் 12-ம் வகுப்பு தேர்வுக்கான முடிவு வந்தது. அதில் இளம்பரிதி தோல்வி அடைந்துவிட்டதாக கூறப் படுகிறது. இதையடுத்து இளம்பரிதியின் பெற்றோர் அவரை மீண்டும் துபாய்க்கு வரும்படி அழைத்தனர்.இதற்காக திங்களன்று சென்னை விமான நிலையம் சென்ற இளம்பரிதி திடீரென மாயமானார். இது குறித்து சரோஜாவின் புகாரின் அடிப்படையில் விமான நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இளம் பரிதியை தேடி வருகிறார் கள். அவர் தேர்வில் தோல்வி அடைந்ததால் எங்கேயாவது சென்று விட்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

;