tamilnadu

img

விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவுக்குக் காரணமான கயவர்களைத் தண்டித்திடு - சிபிஎம்

விசாகப்பட்டினம் விஷ வாயுக் கசிவுக்குக் காரணமான கயவர்களைத் தண்டித்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விசாகப்பட்டினம் எல்ஜி பாலிமர்ஸ் ஆலையில் மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய விதத்தில் ஏற்பட்டுள்ள விஷவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதுவரையிலும் பத்துக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். சுமார் ஆயிரம்பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  இறந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என மருத்தவமனையினர் எதிர்பார்க்கின்றனர்.

இந்த விபத்து, கம்பெனி நிர்வாகத்தின் கிரிமினல் பொறுப்பின்மையைத் தெளிவாகக் காட்டுகிறது. மூடிய ஆலை, சமூக முடக்கத்திற்குப் பின் திறக்கப்படும்போது, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தால்இத்தகு விபத்து ஏற்பட்டிருக்குமா என்பது குறித்து முறையாகப் புலன் விசாரணை செய்யப்பட வேண்டியது அவசியம்.

கரும்புகை வெளிவருவதைத் தொடர்ந்துமக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி ஓடிக்கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. இறப்புக்கான காரணம், விஷ வாயுக் கசிவினால் ஏற்பட்ட மூச்சுத் திணறலே பிரதான காரணமாகும். பாதிப்புக்கு உள்ளானவர்களைக் காலத்தில் மருத்துவ சிகிச்சைக்காக மாவட்டநிர்வாகம் கொண்டு செல்லத் தவறியதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பிட்ட கால அவகாசத்தில் நீதித்துறை விசாரணை உடனடியாக  மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இதற்குக் காரணமான கயவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோருகிறது. எல்ஜி பாலிமர்ஸ் நிர்வாகம் இதற்குப் குற்றப்பொறுப்பு என நிச்சயித்து, அதற்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுத்திட வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடாக அளித்திட வேண்டும் மற்றும் காயமடைந்தவர்களுக்கும் உரிய இழப்பீடு அளித்திட வேண்டும்.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு கோரியுள்ளது.

(ந.நி.)