tamilnadu

img

இடதுசாரி அரசின் தனிச்சிறப்பு

கேரளத்தில் வெளிப்படையான ஆட்சி நிர்வாகத்தின் 4 ஆண்டுகள் 

திருவனந்தபுரம், மே 25- கேரளத்தில் வெளிப்படையான ஆட்சி நிர்வாகம் 4 ஆண்டு கால எல்டிஎப்  அரசின் தனிச்சிறப்பு எனவும், இதுவரை இந்த அரசு மேற்கொண்ட பல முன் னேற்ற நடவடிக்கைள்தான் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளில் துணை நிற்ப தாகவும் முதல்வர் பினராயி விஜயன் கூறினார். கேரளத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவையொட்டி திருவனந்தபுரத்தில் திங்களன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இம்முறை எல்டிஎப் அரசின் நான்காம் ஆண்டு விழா இல்லை. உலகம் முழுவதும்- அதன் பகுதியாக கேரளமும் கோவிட் என்கிற கொள்ளை நோயை தடுப்பதற்கான போர் களத்தில் நிற்கிறோம். இந்த அரசு 2016இல் பொறுப்பேற்ற பிறகு 2017 இல் ஒக்கி புயலை எதிர்கொண்டது. 2018 இல் நிபா வைரஸ் தாக்குதலையும் அதையொட்டி இந்த நூற்றாண்டு கண்டிராத பெரு வெள்ளத்தையும் கேரளம் எதிர் கொண்டது. அதிலிருந்து மீண்டுவர ஒட்டுமொத்த கேரள சமூகத்தின் உதவி யுடன் முயற்சிக்கும்போது 2019இல் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு என இயற்கைப் பேரழிவை சந்தித்தோம். இதோ இப்போது உலகையே அச்சு றுத்தும் கோவிட் கொள்ளைநோயை சந்தித்து வருகிறோம். இவற்றை எல்லாம் கண்டு நாம் பதறவில்லை. லட்சி யங்களை கைவிடாமல் கேரளத்தின் மறுவாழ்வுக்கும் முன்னேற்றத்துக்கு மான முயற்சிகள் தொடர்கின்றன.

வாக்குறுதிகள் நிறைவேற்றம்

பல்வேறு துறைகளில் நம்மால் முன்னேற்றம் காண முடிந்துள் ளது. எல்டிஎப், 5 ஆண்டுகளில் நிறை வேற்றுவதாக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலானவை 4 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன. சிலருக்கு தேர்தல் அறிக்கை என்பது ஓட்டு வாங்கு வதற்கான ஒரு தந்திரம். ஆனால் எல்டிஎப் அளித்த வாக்குறுதிகளை நிறை வேற்றியதுடன் அவற்றின் முன்னேற்ற த்தை நிலை அறிக்கையாக (புராக்ரஸ் ரிப்போர்ட்) மக்கள் முன்பும் வைத்து வரு கிறது. இந்த ஆண்டுக்கான ரிப்போர்ட்  அடுத்த ஓரிரு நாட்களில் வெளியிடப் படும்.

உளமார்ந்த நம்பிக்கையுடன் நான்கு திட்டங்களை இந்த அரசு முன் வைத்தது. அதன்படி லைப் மிஷன் திட்டத்தில் 2,19,154 வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. நிலமற்ற ஏழை களுக்கு இந்த ஆண்டுக்குள் அடுக்கு மாடி வளாக குடியிருப்புகள் கட்டித் தரப்படும். மீன் தொழிலாளர்களுக்கு ரூ.2450 கோடி மதிப்பில் பாதுகாப்பான குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டுள்ளன. 5 ஆண்டுகளில் 2 லட்சம் பட்டாக்கள் வழங்கப்படும் என அறிவித்ததில் இது வரை 1,43,000 பட்டாக்கள் வழங்கப் பட்டன.  கோவிட் இடையூறு இல்லை யென்றால் மேலும் அதிக பட்டாக்கள் வழங்கியிருக்கலாம். ஆனாலும் மேலும் 35,000 பட்டாக்கள் இந்த ஆண்டுக்குள் வழங்க முடியும்.  நீரோட்டம் நின்றுபோன ஆறுகளை புனரமைக்க முடிந்தது ஹரித கேரளம் மிஷனின் ஒரு வெற்றி யாகும். கிணறு, குளம், வாய்க்கால்கள், நீரோடைகள் போன்றவற்றை தூய்மை யாக்க இத்திட்டத்தின் மூலம் சாத்திய மானது.  

சுகாதாரத்துறையில் வளர்ச்சி

கோவிட்டை எதிர்கொள்வதற்கான துணிச்சலை அளித்ததில் முக்கிய  மானது ஆர்த்தவம் மிஷன். கேரளத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் முதல் குடும்ப நல மையங்கள், ஆய்வகங்கள், புறநோயாளி பிரிவுகள், பல்நோக்கு மருத்துவமனைகள் போன்றவை உலகம் உற்று நோக்கும் நிலையை எட்டியுள்ளன. நிபா போன்ற வைரஸ்களை  கண்டறிய அட்வான்ஸ்டு வைராலஜி நிறுவனத்தை அமைக்க முடிந்துள்ளது. கடந்த நிதி ஆண்டைவிட இந்த நிதி ஆண்டில் 15 சதவிகிதம் செலவு அதிகரிக்கும் என  மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதற் கேற்ப வருவாய் இல்லை. இங்கேதான் மத்திய அரசின் உதவி தேவை. அத்த கைய உதவிகள் கிடைக்காதது கடுமை யான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

பட்ஜெட்டுக்கு அப்பால், அடிப்படை வளர்ச்சி காண ‘கிப்பி’ உருவாக்கப் பட்டது. ரூ.50,000 கோடிக்கான உதவி அடிப்படை வசதிகளுக்கு தேவைப் பட்டது. நடப்பாண்டில் ரூ.54,394 கோடிக்கான ஒப்புதலை கிப்பி அளித்துள்ளது. மசாலா பத்திரங்கள் மூலம் 2150 கோடி ரூபாய் கிடைக்கும். சாதாரண வளர்ச்சியின் விகிதத்தை விட  ஐந்து மடங்கு அதிகரிக்க கிப்பி உத வியுள்ளது. அனைவரையும் உள்ள டக்கிய புதிய கேரளம் என்கிற கலாச் சாரத்தை வளர்த்துள்ளோம்.

சமூக பாதுகாப்பு

இந்த கோவிட் காலத்தில் யாரும்  பட்டினி கிடக்கக் கூடாது என்பதற்காக சமூக சமையலறைகள் துவக்கப்பட்டன. தேவையான அனைவருக்கும் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் அளிக்கப் பட்டது. சமூக பாதுகாப்பு நிதியாக 2011 முதல் 2016 வரையிலான 5 ஆண்டு களில் ரூ.9,270 கோடி வழங்கப்பட்டது. இந்த அரசு கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.23,409 கோடியை சமூக பாது காப்பு ஓய்வூதியமாக வழங்கியுள்ளது. கோவிட் காலத்தில் எந்த ஓய்வூதியமும் கிடைக்காதவர்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டது.

24 மணி நேரமும் செயல்படும் வனிதா ஹெல்ப் லைன், காவல்துறையின்  பிங்க் பெட்ரோல் போன்றவை பெண்கள் பாதுகாப்புக்கான சிறப்பு தலையீடுகளாகும். காவல்துறையில் பெண்கள் பிரதிநிதித்துவம் 25  சத விகிதமாக அதிகரிக்க வேண்டும்.  பொதுக் கல்வியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் 5லட்சம் மாணவர்கள் கூடுதலாக அரசுப்பள்ளி களுக்கு வந்துள்ளனர். பள்ளிகளின் அடிப்படை வசதிகள் அதிகரிக்கப் பட்டன. 45,000 உயர் தொழில்நுட்பத்து டன் கூடிய சீர்மிகு(ஸ்மார்ட்) வகுப்பறைகள் அமைக்கப்பட்டன.