tamilnadu

img

மாணவர்களுக்கு யோகா பயிற்சி 

 அரியலூர், டிச.29- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர் களுக்கு பரப்ரம்ஹம் தியான மையம் சார்பில் தியானம் மற்றும் யோகா பயிற்சி துவங்கப்பட்டது. மேலும் இப்பயிற்சி யானது மூன்று மாதங்களுக்கு அளிக்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கு பரப்ரம்ஹம் பவுண்டேசன் நிறுவனத் தலைவர் த.முத்துக்குமரன் தலைமை வகித்து பேசுகை யில், தியானம் செய்வதால் நேர்முறை ஆற்றல் பெருகும். கர்மவினைகள் குறையும், சிறந்த அறவாழ்க்கையை மேற் கொள்வீர். மெய்ஞானம் மற்றும் படிப்பாற்றல் பெருகும் என்றார். பள்ளி முதல்வர் தனலட்சுமி வரவேற்றார். உஷா முத்துக்குமரன் நன்றி கூறினார்.

;