tamilnadu

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

 அரியலூர், ஆக.11- அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மதனத்தார்  மெயின்ரோட்டை சேர்ந்தவர் முருகானந்தம் (40). விவசாய கூலி தொழிலாளியான இவர், தனது வீட்டின் பின்புறம் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு ள்ளார் . அதற்காக மின்மோட்டார் பொருத்தும் போது எதிர்பா ராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே முரு கானந்தம் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மனைவி அமுதவள்ளி கொடுத்த புகாரின் பேரில்  போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.