அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டையில் பெண்ணைகட்டிப்போட்டு 30 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர் களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை அருகே உள்ள காந்திநகர் அய்யப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார். இவர் அருப்புக்கோட்டை - திருச்சுழி சாலையில் காய்கறி கடைநடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயபிரபா (வயது 33). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண்குழந்தையும் உள்ளது. இந்தநிலையில் ஜெயபிரபா வீட்டில் தனது குழந்தைகளுடன் இருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் 4 பேர் ராம்குமாரின் பெயரை சொல்லி கூப்பிட்டனர்.
உடனே ஜெயபிரபா வீட்டை விட்டுவெளியே வந்தார். அப்போது அவர்கள்ஜெயபிரபாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டுக்குள் அழைத்து சென்றனர். பின்னர் அவரது வாயை பேண்டேஜ் மூலம் கட்டினர். இதையும் மீறி சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவோம் என அவர்கள் மிரட்டியதாக தெரிகிறது.மேலும் அவர்களது குழந்தைகள் 2 பேரையும் கத்தியை காட்டி சத்தம் போட கூடாது என மிரட்டினார்களாம். பின்பு, ஜெயபிரபா கழுத்தில் இருந்த நகை,பீரோவில் இருந்த 30 பவுன் நகை மற்றும்பணத்தை கொள்ளை அடித்துக் கொண்டு வீட்டிற்குள் அவர்கள் 3 பேரையும் வைத்து கதவை பூட்டி விட்டு அங்கிருந்து மர்மநபர்கள் தப்பிச் சென்றனர்.இதையடுத்து, குழந்தைகள் சத்தம்போடவே, அக்கம்பக்கத்தினர் வந்துபார்த்து அனைவரையும் மீட்டுள்ளனர். மேலும், அப்பகுதி பொது மக்கள்அருப்புக்கோட்டை நகர் போலீசாருக்குதகவல் தெரிவித்தனர். விரைந்து வந்தடி.எஸ்.பி சகாய ஜோஸ், இன்ஸ்பெக் டர் பாலமுருகன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜபுஷ்பா ஆகியோர் விசாரணை நடத்தினர்.விருதுநகர் மாவட்ட எஸ்.பி பெருமாள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.இந்த சம்பவம் குறித்து அருப்புக் கோட்டை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து நகை மற்றும் பணத்தைகொள்ளை அடித்து சென்ற மர்மநபர் களை வலைவீசி தேடி வருகின்றனர்.