tamilnadu

அனைத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த ஆயத்த பிரச்சாரம்

 அரியலூர், டிச.3-  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்க அலுவலகத்தில், மத்திய அரசின் தொழிலாளர், மக்கள் விரோத போக்கினை கண்டித்து வரும் ஜனவரி 8-இல் நடைபெற இருக்கும் பொது வேலை நிறுத்தத்தை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம் மாவட்டச் செயலாளர் எஸ்.என்.துரைராஜ் தலைமையில் நடைபெற்றது.  சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி, பொருளாளர் ஆர்.சிற்றம்பலம், எ.ஐ.டி.சி மாவட்ட பொதுச் செயலாளர் டி.தண்டபாணி, தலைவர் ஆர்.தனசிங், தொ.மு.ச பொதுக்குழ உறுப்பினர் வி.முத்தையான், கைவினை கலைஞர்கள் தொழிற்சங்க பேரவை மாவட்ட செயலாளர் ஆர்.ஆறுமுகம் மற்றும் அனைத்து சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். வேலை நிறுத்தத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டு நடத்துவது,  ஜன.4, 5 தேதிகளில் கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்க சார்பில் அனைத்து பகுதிகளிலும் வாகனங்கள் மூலம் பிரச்சாரம் செய்வதென உறுதி செய்யப்பட்டது.  ஜெயங்கொண்டம் நகராட்சி முழுவதும் ஜன.6-ஆம் தேதி தெருமுனைப் பிரச்சாரம் செய்வது, 8-ஆம் தேதி ஜெயங்கொண்டத்தில் மறியல் செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

;