tamilnadu

img

விண்ணுக்கு செயற்கைக்கோள்: அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு

சிதம்பரம்,டிச.18- தேசிய வடிவமைப்பு மற்றும் மேம்  பாட்டுக் குழு நடத்திய இந்திய அளவி லான செயற்கைக்கோள் வடிவமைப்பு போட்டியை வலைதளம் (ஆன்லைன்) வாயி லாக நடத்தியது. இதில் செயற்கைக்கோளுக்  கான பொருட்களை பரிந்துரைக்க வேண்  டும். அது புதுமையாகவும், எளிமையான தாகவும் இருக்க வேண்டும். அந்த பொருள் 3.8 செ.மீ அளவிலான பெட்டியில்  பொருந்தும் வண்ணம் அமைய வேண்டும்  என்ற விதிமுறைகளை விதித்தது.  போட்டியில் இந்தியா முழுவதிலி ருந்தும் ஏறத்தாழ 3000 பள்ளிகள் பங்கேற்  றுள்ளனர். தமிழகத்திலிருந்து 200-க்கும்  மேற்பட்ட பள்ளிகள் பங்கெடுத்த நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலுள்ள அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் இதில் கலந்துகொண்டனர். 

இந்த மாணவர்கள் ஏறத்தாழ ஒன்பது பொருட்களை  இந்த போட்டியில் பரிந்து ரைத்துள்ளனர். பரிந்துரை செய்த பொருட்க ளில் இரண்டை தேர்வு செய்து  இருபொருட்  குழுக்களை இந்திய அளவில் தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்திலிருந்து 6  குழுக்கள் தேர்தெடுக்கப்பட்டு உள்ளனர்.  அதில் இரண்டு குழுக்கள் ஆறுமுக நாவலர்  மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் குழுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் குழுவின் தலைவர் .ராகுல்  சிமெண்டை விண்வெளிக்கு அனுப்ப பரிந்துரை செய்தது குறித்து செய்தி யாளர்களிடம் பேசுகையில்,“ சிமெண்டால் கட்டப்பட்ட சுவரையோ, தளத்தையோ இடித்து நிலத்தில் போட்டு விடுகிறோம். அதன் மூலம் மழைநீர் மண்ணுக்குள் இறங்குவது தடுக்கப்படுகிறது. இதுவும் பிளாஸ்டிக் போல் மழைநீரை பூமிக்கு அனுப்பாது. அதனால் விண்ணுக்கு சிமெண்டை அனுப்பி அங்குள்ள மாற் றத்தை ஆராய்வதன் மூலம் இங்குள்ள கான்கிரீட் கழிவுகளை அழிக்கவோ மறு சுழற்சி செய்வதற்கான வழிகளை ஆராயவோ முடியும்” என்றார்..  இந்த குழுவில் வசந்தபிரியன், நவீன்  ராஜ், கீர்த்திவாசன், சூரியா ஆகியோர் உள்ளனர்.

இரண்டாம் குழுவின் தலைவர் ரகுராம்  கூறுகையில்,“ பென்சிலின் என்ற உயிர் எதிர்  பொருளை (ஆன்டிபயாடிக்) அதில் அனுப்ப இருக்கிறோம். விண்வெளியில் தங்கி ஆராய்ச்சிகள் செய்யும் வீரர்க ளுக்கு தேவையான தடுப்பு மருந்துகள் புவி யிலிருந்து இராக்கெட் மூலமாக அனுப் பப்படுகிறது. மாற்றாக இத்தகைய உயிர் எதிர்பொருளை அங்கேயே உருவாக்க முடிந்தால் நேரம் மற்றும் பொருட்செலவு பெருமளவில் குறையும். இதற்கான ஆய்வு  செய்வதற்கு பென்சிலின் என்ற பூஞ் சையை விண்ணுக்கு அனுப்புகிறோம்” என்றார். இந்த குழுவில் தமிழ்மன்னன், சிவா,  சுதர்சன், அகமதுகான் ஆகியோர் உள்ளனர். இதில் மாணவர்களுக்கு உதவியாக  அனைத்து உதவிகளையும் வழிகாட்டியாய்  பள்ளியின் கணித ஆசிரியர் வேல்பிர காஷ்  செய்து வருகிறார்.  தேர்வு பெற்ற மாண வர்களுக்கு பள்ளியின் செயலாளர் அருள்மொழிச்செல்வன், தலைமை ஆசிரி யர் தையல்நாயகி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

 

;