tamilnadu

img

அரியலூர்: 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - 60 வயது முதியவர் கைது  

அரியலூரில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 60 வயது முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.  

அரியலூர் மாவட்டம் திருக்களப்பூர் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன்(60) இலந்தைப்பழம் தோட்டம் ஒன்று வைத்திருக்கிறார். அங்கு இலந்தை பழத்தை பறிக்க சிறுவர், சிறுமிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 6 மற்றும் 8 வயதுடைய இரண்டு சிறுமிகள் தோட்டத்தில் உள்ள இலந்தை பழம் பறிப்பதற்காக வந்துள்ளனர். அப்போது 8 வயது சிறுமியை மட்டும்  தனியாக அழைத்துச்சென்று, இளங்கோவன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது நடந்ததை சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளங்கோவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

;