tamilnadu

img

சரியான நேரத்தில் ரேஷன் கடை திறக்காதால் மக்கள் அவதி

அரியலூர் மாவட்டம் வாலாஜா ராஜிவ் நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடை சரியான நேரத்தில் முறையாக திறக்கப்படுவதில்லை. இதனால் பொது மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலை உள்ளது. எனவே ஏழை எளிய மக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உடனடியாக இது குறித்து உரிய தீர்வு காண வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரியலூர் ஒன்றியச் செயலாளர் துரை.அருணன் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.