சென்னை, ஏப்.13- எஸ்ஸார் அறக்கட்டளை, வைரஸ் தொற்று பரவலை அடுத்து, இந்தியா முழுவதிலும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண உதவிகளில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது.
சமூகத்தில் மிகவும் நலிவுற்ற மக்களைச் சென்றடைவதை இலக்காகக் கொண்டு இப்பணி கள் நடைபெற்று வருகின்றன. மாநில அரசு நிர்வாகத்துடன் நேரடியாக ஒருங்கிணைந்து, நிவாரணப் பணிகளை மேற்கொண்டுவரும் பல முன்னணி குழுக்களுடன் சேர்ந்து பணியாற்றி வருவதாக எஸ்ஸார் குழுமத்தின் மனிதவள குழுத் தலைரும்எஸ்ஸார் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி கௌவ்துப் சோனல்கர்
கூறி யுள்ளார்.
இக்கட்டான சூழ்நிலையில் நிதி தேவைப்ப டும் பல்வேறு குழுக்களுக்கு ஆதரவளிக்க உறுதி பூண்டுள்ளதாகவும் அந்த அறக்கட்டளை தெரி வித்துள்ளது.